பிரபலமான இடுகைகள்

26 பிப்ரவரி, 2011

எனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள்


எனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள் - காதல் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் வந்த படங்கள் என்பது மிகவும் குறைவு. மொத்தத்தில் ஒரு பத்து படங்கள் கூட கணக்கில் அடங்காது. ஆனால் காதல் திரைப்படங்கள்? யப்பா, அது கணக்கிலேயே அடங்காது. எனக்கு பிடித்த ஒரு 10 காதல் படங்களை இங்கே பதிவேற்றுள்ளேன். அவை எனக்கு பிடித்தவைகளே தவிர, இது தான் சிறந்தது என்று சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு நான் குறிப்பிட்டுள்ள காதல் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்த படங்களை நான் வரிசைபடுத்தவில்லை. காரணம், இது காதல் ஸ்பெஷல்.

வாழ்வே மாயம்தான் காதலித்த பெண்ணிற்கு தனக்கு இருக்கும் நோய் பற்றி தெரியவிடாமல், அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு உண்மையான காதலனின் படம். காதல் மன்னன் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பு அருமை. இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அதை தமிழ்க்கேற்றார் போல் எடுத்தது Super. படத்தில் கடைசியாக வரும் வந்தனம், வாழ்வே மாயம் என்ற இரண்டு பாடல்கள் இன்றும் உண்மையாக காதலிப்பவர்களை அழவைக்கும்.

மௌன ராகம்கார்த்திக், மோகன், ரேவதி நடிப்பில் வெளிவந்த அற்புதமான படம். ஒரு ஜாலியான காதலனாக கார்த்திக்கும், கண்ணியமான கணவனாக மோகனும் கலக்கிய படம். இப்படி ஒரு காதலி நமக்கு வேண்டும் என்று ஏங்கவைக்கும் அளவுக்கு ரேவதியின் நடிப்பு மிகவும் அருமை. நான் மணிரத்னத்தின் படங்களில் ரசிக்கும் முக்கியமான படம் இது.
புன்னகை மன்னன்
காதல் மன்னனான கமல்ஹாசனை புன்னகை மன்னனாக மாற்றிய படம். காதல் கைகூடாமல் தற்கொலை செய்துகொள்ளும் காதலர்களை பற்றி செய்திகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு இந்த படம் ஞாபகம் வரும். ஒரு சுட்டித்தனமான காதலி வேடம் என்றால் அதற்கு ரேவதி தான் சரியான நடிகை. கொஞ்ச நேரமே வந்தாலும் ரேகா நம் மனதில் நிங்காத இடம் பிடித்துவிடுகிறார். KB அவர்களின் அற்புதமான காதல் படம் இது.

இதயத்தை திருடாதே
இந்த படத்தை பற்றி கேள்விபட்டிருந்தேன். ஆனால் சமிபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். படம் சான்சே இல்லை. காதலிக்கும் இருவருக்குமே தங்கள் பெற்றோரிடமோ, அல்லது மற்றவர்களிடமோ எந்த பிரச்னையும் இல்லை. பிரச்சனை அவர்களுக்கு நோய் ரூபத்தில் இருக்கிறது. ஆனால் அந்த சோகங்கள் எதுவுமே இல்லாமல் சந்தோஷமே காதல் என்று நிருபித்த படம். நாகர்ஜுனா நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது.
இதயம்
எல்லோருக்குமே காதலை சொல்ல தயக்கம், படபடப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதுவே காதலுக்கு பிரச்சனையானால்? ஆரம்பத்தில் எனக்கு இந்த படம் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் போகப்போக இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்து போனது. முரளி சாரின் நடிப்பு ஆஹா, இந்த வேடத்திற்கு சரியான நடிகர் முரளி மட்டும் தான். (I Really miss you Murali sir. இப்ப நடிக்க வர்ற எவனுக்கும் லவ் பண்ண கூட தெரியல சார்).
குணா
'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது'. இந்த ஒரு வாக்கியம் போதும் இந்த படத்தை பற்றி சொல்ல. வாழக்கூடாத சுழலில் வாழும் சற்று மனநிலை சரியில்லாத ஒருவன், தான் தேவதையாக நினைக்கும் பெண்ணோடு எப்படி சேர்ந்தான் என்பதே கதை. கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பு, மிளிர்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சூப்பர்.

காதல் கோட்டை
'தல' அஜித்குமார், அகத்தியன் கூட்டணியில் வந்த அற்புதமான திரைப்படம். பார்க்காமலேயே காதல் என்ற புது காதலை, உண்மையான நம்பகத்தன்மையோடு வந்த படம். அஜித்தும், தேவயானியும் சிறப்பாக நடித்திருப்பார்கள் இந்த படத்தில். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது.

பூவே உனக்காக
தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும், அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்று சொன்ன படம். இளைய தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த படம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை.


சேது
காதலித்தால் கண்டிப்பாக ஒருவன் பைத்தியம் ஆகிவிடுவான் என்று பொதுவாக சொல்லுவார்கள். ஆனால் இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக காதலை ஏற்க மறுப்பவர்களையும் காதல் பைத்தியம் ஆக்கிவிடும். எங்கோ இருந்த விக்ரமை, எங்கோ ஒரு உயரத்திற்கு கொண்டுசென்ற படம் இது. இந்த படத்தின் முலமாக பாலா என்ற சிறந்த இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தார்.

காதல்
இந்த படத்திற்கு என் நண்பன் என்னை அழைத்து சென்றபோது அவனை திட்டிக்கொண்டே படத்தை பார்த்தேன். ஏனென்றால் எனக்கு இது போன்ற காதல் தோல்வி அடையும் படங்கள் பிடிக்காது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்தபோது நான் மிரண்டே போனேன். இப்படியும் உலகத்தில் நடக்குமா? என்று. ஆனால் இது உண்மை. படத்தை பற்றி சொல்ல

உலகம் போற்றும் பிரபலங்களின் தத்துவங்கள்

உலகம் போற்றும் பிரபலங்களின் 7 தன்னம்பிக்கை தத்துவங்கள்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
- APJ Abdul Kalam.

நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்.


உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- Alexander the Great.
Success Stands in two Steps:
1). Stop Thinking in Terms of limitation,
2). Start Thinking in Terms of Possibilities.
- Alfred Noble.



உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட
வேதனைப்படுத்த கூடாது.

- Charlie Chaplin.

தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.


யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்.

ரஜினி ஒரு கலாட்டா

ஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

 

ஜப்பானில் ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் அறிந்ததே. ஆனால் இந்த அளவிற்கு ஜப்பான் போன்ற நாடுகளில் அவர் பிரபலமாகவும், அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகக்கூட்டம் இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. ஜப்பானில் நடந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ரஜினியை போல் ஒருவர் வேடமணிந்து ரஜினி பாடலை ஜப்பானிய மொழியில் பாடி ஆடி அசத்தியுள்ளார் பாருங்கள்.



கண்ணை நம்பாதே - லேசர் ஒளி காட்சிகள்: சமீபத்தில் இந்த லேசர் ஒளி காட்சியை நெட்டில் கண்டு ரசித்தேன். என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு தொழில்நுட்பம்.


மேலே உள்ள இரண்டுமே நெட்டில் பார்த்து ரசித்த(சுட்ட)து. நன்றி youtube.

என் அருகில் நீ இருந்தால்? - ஊனத்தை ஊனமாக்கிய நடன ஜோடிகள்.



இருபது முப்பது பேர் புடைசூழ மூன்று நிமிட பாடலை முப்பது நாட்கள் ஷூட்டிங் செய்து, ஒவ்வொரு பிட்டாக அதை சேர்த்து காண்பிக்கும் போது, இவை அனைத்தும் நம் உள் மனதுக்கு தெரிந்தாலும் கூட அதை திரையில் காணும்போது நம்மையும் அறியாமல் கை தட்டியோ விசில் அடித்தோ அதை ஆராவாரம் செய்கிறோம்.

இங்கே பாருங்கள், எனக்கு நீ துணை, உனக்கு நான் துணை என, ஒரு கால் இல்லாதவர் ஒரு கை இல்லாதவரின் துணை கொண்டு தொடர்ச்சியாக சாகச நடனம் புரிவதை. இதை பார்த்து ரசித்து கை தட்டுபவர்களின் முகத்தில் கூட ஒரு வித இறுக்கம் இருப்பதை காண முடிகிறது. ஹ்ம்ம்...நாமலாம் எல்லாம் இருந்தால் கூட?


சுத்தி சுத்தி வாராக...


24 பிப்ரவரி, 2011

ஒய்யல தமிழனடா

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ' எல்லாளன் '!  

இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது.

இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது.

விழாவில் திரையிடப்படுகின்றமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் 17 திரைப் படங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

1. எந்திரன்

2. அங்காடித் தெரு

3. களவாணி

4. மதராசபட்டினம்

5. ஆடுகளம்

6. மைனா

7. பாஸ் என்கிற பாஸ்கரன்

8. விண்ணைத்தாண்டி வருவாயா

9. யுத்தம் செய்

10. தா

11. பயணம்

12. தென்மேற்கு பருவக்காற்று

13. என் சுவாசம்

14. எங்க வீட்டுப் பிள்ளை

15. கப்பல் ஓட்டிய தமிழன்

16. செங்கடல்

17. எல்லாளன்

இவற்றில் எல்லாளன், செங்கடல் ஆகிய திரைப் படங்கள் சிறப்புப் பிரிவில் காண்பிக்கப்படுகின்றன.

எல்லாளன் படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்.

இவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் விமானப் படைத் தாக்குதல் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டு உள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நிஜ ஆயுதங்கள் திரைப் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. தாக்குதலுக்கு முன்னர் இயக்க உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட நிஜப் பயிற்சிகளும் படக் காட்சிகளில் இடம்பெறுகின்றன.

திரைப்படத்துக்கான ஒளிப் பதிவை இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த கலைஞர் சந்தோஷ் மேற்கொண்டு இருக்கின்றார்.


 

23 பிப்ரவரி, 2011

ரொமான்ஸ்


ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் ஐடியா! 
குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள். வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.

சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.


உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.


இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.

பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல 
வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்



ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?
ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறத இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் 
நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்



மறக்கப்பட்ட மகனின்

மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி

  


அழகர்கோவில் : தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி பரிதவிக்கிறார் கமலா.

தண்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் கமலா (86). இவரது மகன் மாரியப்பன் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. முதுமையில் வாடிய கமலா பெற்ற மகன் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு பணிவிடைகள் செய்ய மனமில்லாத மகன், மருமகள் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அழகர்கோயிலுக்கு அழைத்து வந்தனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் இறக்கி விட்டு டிக்கெட் வாங்கி வருகிறோம் எனக் கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. மாலை வரை அனாதையாக தவித்த அவரை, கோயில் ஊழியர்கள் சிலர் குப்பை அள்ளும் டிரைசைக்கிளில் வைத்து பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டடத்தில் போட்டுச்சென்றனர். பல நாட்களாக ஒரு வேளை சாப்பாடுகூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகிறார். பசியால் வாடும் இவர் சிலரிடம் சாப்பாடு, டீ வாங்கித் தரும்படி கூறுகிறார். இரக்கமற்ற ஒருவர் டீ வாங்கித் தருவதாகக் கூறி, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்று விட்டார். உணவிற்கு வழியில்லாமல் இருக்கும் இவருக்கு மாவட்ட சமூக நலத்துறையினரோ, பிற அமைப்பினரோ ஆதரவு தர வேண்டும்.

22 பிப்ரவரி, 2011

கணினி பற்றி பாகம் 1


விண்டோசில் விரும்பிய எழுத்துக்களை கொண்டுவர


கணிணியில் உள்ள எழுத்துக்களை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இது டெக்ஸ்டாப்பின் வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்தால் வரும் விண்டோ:-(இதன் எழுத்துக்களை பாருங்கள்) 
இதே விண்டோவில் நாம் விரும்பிய எழுத்துக்களை வேண்டிய நிறங்களை  கொண்டுவந்தபின் வந்த விண்டோவினை பாருங்கள்:-
சரி..இந்த எழுத்துக்களை எப்படி நமது கம்யூட்டரில் கொண்டுவருவது...இதற்கு சாப்ட்வேர் எல்லாம் தேவையில்லைங்க..ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும்.முன்பு சொன்னது மாதிரி டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து( நான் மெனு என்பதனை தேர்வு செய்துள்ளேன்)அதன் எழுத்துரு - வண்ணம் - அளவு -தேர்வு செய்து ஓ,கே.தரவும் . .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் 
வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.


புகைப்படங்களை டிஜிட்டல் 

ஆர்ட் ஆக மாற்ற 

ஆன்லைன் தளம



சாதாரண புகைப்படங்களை அழகிய டிஜிட்டல் ஆர்ட் (Digital Art) ஆக மாற்றுவதற்கு உதவும் தளமாக Befunky உள்ளது. விண்டோஸ் பெயிண்ட் பிரஷில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. புகைப்படத்தை கார்ட்டூன் போலவோ, கரியால் வரைந்த ஓவியம் போலவோ, மற்றும் பல புதிய வடிவமாக மாற்றவோ Befunky பயன்படுத்தலாம்.





நம் கணினியில் உள்ள புகைப்படத்தை அங்கே தரவேற்றவேண்டும் (Upload). சமூகக் குழும தளங்களில் (Social Networking sites) இருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு. டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்றப்பட்ட நமது திறமையால் உருவான அழகிய நவீனத்தை பேஸ்புக், மைஸ்பேஸ் போன்றவற்றில் பகிரும் வசதியும் உண்டு.
விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும் (Operating System) இதைப் பயன்படுத்தலாம். உங்கள் உலவியில் (Browser) இருந்து இயக்குவதால் இது சாத்தியமாகிறது. சமீபத்திய பிளாஷ் ப்ளேயர் (Flash Player) தேவைப்பட்டால் தரவிறக்கிக்  (Download) கொள்ளவும்.
தள முகவரி : http://www.befunky.com/

நன்றி IT TWEETS இணையம்



19 பிப்ரவரி, 2011

ஆண்குறி ஓர்


ஆண்குறி ஓர் ஆய்வு


 
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.

இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.

ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.

ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.

ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.

முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.

காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு.
சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.

அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.

பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.

இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.

விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.
விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.

விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?

விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.
அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை...

முதலிரவை சந்திக்கும்

முதலிரவை சந்திக்கும் தம்பதியருக்கு!


திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை.

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.

அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.

அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.

உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காக (V.day)


"வேலன்டைன்ஸ் டே" என்ற காதலர் தினத்தை (பிப்ரவரி'14) ஐரோப்பிய நாடுகளில் செத்துவிட்ட இந்தத் தினம், அமெரிக்கா, பிரிட்டனில் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், திடீரென்று இப்பொழுது முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது. யார் இந்த வேலன்டைன்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது?

காதலர் தினத்திற்கென்று கதைகள் ஏராளம் உண்டு.

நான்காவது நூற்றாண்டில் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த வேலன்டைன் கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. இந்தத் தினத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல இது. இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல் இது. எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும்.

அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும். இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை தோல் வாரினால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக உடுத்தியிருப்பர். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் ரத்தங்களைக் கொண்டு கறை படுத்தப்பட்டிருக்கும்.

இந்தச் சாட்டையடியை 'புனிதமானதாக' அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் 'புனிதப் புருஷர்களாக' மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல முறையில் தங்கள் குழந்தைகளை வளர்ப்பார்களாம். இப்படியொரு நம்பிக்கை. இதற்கொரு கொண்டாட்டம்.

இந்த மடத்தனமான லூப்பர்காலியா என்றழைக்கப்படும் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக கிறிஸ்தவ மதம் கடும் முயற்சி எடுத்தது. வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது. குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனித துறவிகளின் பெயர்களை வைத்தது.

இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இந்தத் தினம் வரை அந்தத் துறவியைப் பின்பற்றி, அவரை மாதிரியே வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

இது சிறிது காலத்தில் "துறவி வேலன்டைன்" தினம் என்று மாற்றப்பட்டது.

கி.பி.496-ல் போப் கிளாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும் கிறிஸ்தவக் கதைகளில் விதவிதமாக 50 வேலன்டைன்கள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. ஒர கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு 'காதல் துறவி'யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக்காவலரின் மகளை அவர் காதலித்தாராம்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி.1776-ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது. அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.

இங்கிலாந்தில் 'புரித்தான்கள்' என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார். இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகிற்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.

இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன்.
 

முதல் பிரசவத்தில் 6 கண்மணிகள்

12 வருட காத்திருப்பிற்கு இறைவன் சுரய்யா ஃபவ்லிக்கு 6 குழந்தைகளை அளித்துள்ளான். இதனால் மகிழ்ச்சியடைந்த எகிப்திய தம்பதியினர் செலவுகளை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால் பல ஆண்டுகளாக சிகிட்சைப் பெற்றுவந்தனர் இருவரும்.

சிகிட்சைக்கான செலவு இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்ந்த இவர்களுக்கு இறைவனின் கருணையினால் 6 குழந்தைகள் என டாக்டர்கள் அறிவித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் செலவுகளை நினைத்து வருந்துகின்றனர்.  3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் மாதம் முழுமை அடையுமுன்பே பிறந்துள்ளதால் அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் உள்ளன.

2000 திர்ஹம் சம்பளத்தில் 1500 திர்ஹம் அபுதாபி ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள சிறிய வீட்டு வாடகையாக ஸாயித் முஹம்மது செலுத்துகிறார். மீதமுள்ள 500 திர்ஹத்தில் குடும்பத்தை சிரமத்தில் ஓட்டவேண்டும் அவருக்கு. குழந்தைகளின் ஹெல்த் இன்ஸூரன்சுக்கு கூட தன்னிடம் பணமில்லை என கவலைக்கொள்கிறார் ஸாயித்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி குழந்தைகள் பிறந்த பொழுதும் இதுவரை மருத்துவமனையை விட்டு செல்லவில்லை அவர்கள். கார்னிச் மருத்துவமனையில் சில நாட்கள் அவசர சிகிட்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ்


விமான தயாரிப்பு வீடியோ

விமான தயாரிப்பு வீடியோ FLY DUBAI


விமான பயணம் என்றாலே நமக்கு அலாதியான இன்பம் அப்படி நாம் செல்லும் விமானம் தயாரிக்கும் வீடியோ வெறும் இரண்டு நிமிடத்தில் சிறப்பானதாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இது

FLY DUBAI என்ற விமான நிறுவனத்திற்கு போயிங் நிறுவனம் தயாரிக்கும் வீடியோ இது

முந்தி விந்து வெளிப்படுதல்!

முந்தி விந்து வெளிப்படுதல்! (premature ejaculation)

 
தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது.

உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.

தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல்.

இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது.

இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.


உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?


இல்லை, இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.


என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?


இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.


சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?


இல்லை, சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை. முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ள வேண்டும். இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சியை நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.

இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.